Saturday, April 24, 2010



அந்த நிலவை
பார் என்று
அவள் கை காட்டினாள்...
ஆஹா என்ன அழகு
அவளது விரல்கள்.!

மலரே
உன் இதழ்களில்
பனித்துளிகளுக்கு
மட்டும்தான் இடமா..?
எனக்கும் கருணை காட்டு..

நீ என் இதயத்தில்
சாய்ந்துக் கொள்..
நான் தாலாட்டுகிறேன்!
என் இதயத்துடிப்பு
உன் தூக்கத்தை கெடுப்பதாக
இருந்தால் சொல்
நான் என் இதயத்துடிப்பை
நிறுத்திக் கொள்கிறேன்..!

இருள் சூழ்ந்த அறையில்
எனக்கு மட்டும்
வெளிச்சம் காட்டுகிறது
உனது குறுந்தகவல்..!


நீயும்
மென்மையானவள் தான்..
சில நேரம் உதிர்ந்து போகிறாய்!

மலரே...
நீயே ஒரு கவிதை
உனக்கொரு கவிதையா?